6 நாள் சுற்றுப்பயணமாக மும்பை வந்தடைந்தார் இஸ்ரேல் ஜனாதிபதி ரிவ்லின்

இந்தியா-இஸ்ரேல் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் ஜனாதிபதி ரியூவென் ரிவிலின் 6 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று மும்பை வந்து சேர்ந்தார்.

இன்று காலை அரசு உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள், மற்றும் கல்வியாளர்களுடன் மும்பை விமானநிலையம் வந்து சேர்ந்த ரிவ்லின், டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். டெல்லி சென்றடைந்ததும். பிரதமர் மோடி வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ஆகியோரை சந்தித்து பேசும் ரிவ்லின், இரு நாட்டு கூட்டு திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வரும் திட்டங்களை பார்வையிட உள்ளார்.

சண்டிகாரில் நடைபெறும் அக்ரோ-டெக் மாநாட்டில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் இணைந்து ரிவ்லின் கலந்து கொள்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் நினைவிடத்துக்கு செல்கிறார். பின்னர் மகாத்மா காந்தியிடன் நினைவிடம் செல்லும் ரிவ்லின் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

ரிவ்லின் இந்தியா புறப்படுவதற்கு முன் வெளியிட்ட அறிக்கையில், “ இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் நட்பு நாடான இந்தியாவுக்கு பயணம் செய்ய உள்ளதாகவும், இருநாடுகளுக்கும் இடையே பழங்கால பாரம்பரியம் உள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான நட்பு மேலும் நெருக்கமாக வளரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...