குறைதீர் கூட்டத்தில் 140 ஓய்வூதியர்களுக்கு நலத்திட்ட உதவிகள்- ஆட்சியர் வழங்கினார்


ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 140 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சம் மதிப்பீட்டிலான பணப்பயன்களுக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று (இன்று) ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றுது. இக்கூட்டத்தில் ஓய்வூதியர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, 140 ஓய்வூதியதார்களுக்கு ரூ.41 லட்சம் மதிப்பிலான பணப்பயன்கள் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடமிருந்து 44 மனுக்கள் பெறப்பட்டது. 30 விண்ணப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டது. 14 மனுக்கள் துரித நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தலைமை அலுவலக ஓய்வூதியத் துறை இணை இயக்குநர் சி.ராமசந்திரன், துணை இயக்குநர் மதிவாணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ஷேசாத்திரி, மாவட்ட கருவூல அலுவலர் (பொ) டி.சி.எல்.நடராஜன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...