வங்கிகளில் பணம் மாற்ற வருபவருக்கு மை வைக்கும் முறை டெல்லியில் அறிமுகம்

மத்திய அரசு அறிவித்த படி வங்கியில் பணம் மாற்ற வருபவருக்கு மை வைக்கும் நடைமுறை டெல்லி உட்பட வடமாநிலங்களில் உள்ள வங்கிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது’ என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி அதிரடியாக அறிவித்ததை தொடர்ந்து, பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள், வங்கிகளை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர்.இதற்கிடையே பழைய நோட்டுகளை மாற்றுவதையே பல நபர்கள் தொழிலாக கொண்டதுபோல, மீண்டும் மீண்டும் வங்கிகளுக்கு சென்று மாற்றி வருவதால் மற்றவர்கள் பெரும்பாதிப்புக்கு ஆளாவதையும் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறைக்கான செயலாளர் சக்தி காந்ததாஸ், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மீண்டும் மீண்டும் ஒரு சில நபர்கள் பணம் எடுப்பதை தவிர்க்க, தேர்தலின்போது ஓட்டு பதிவு செய்ததற்கு அடையாளமாக கை விரலில் அழியாத மை வைப்பதுபோல, வங்கிக்கு வந்து பணத்தை மாற்றிக்கொள்கிற நபர்களுக்கு அழியாத மை வைக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த முறை இன்று டெல்லியில் உள்ள வங்கியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல்,  பஞ்சாப்பில் உள்ள வங்கிகளில் பணம் மாற்றியவர்களுக்கு மை வைக்கப்பட்டது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் வலது ஆள்காட்டி விரலிலும் பிற மாநிலங்களில் இடது ஆள்காட்டி விரலிலும் மை வைக்கப்படுகிறது.

வட மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டாலும், சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இந்த முறை அமலாக ஓரிருநாள் ஆகலாம் என கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம் ஆட்களை அமர்த்தி வங்கிக்கு வந்து மீண்டும் மீண்டும் பழைய நோட்டுகளை மாற்றிக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் தடுக்கப்படும் என நம்பப்படுகிறது.

Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...