வெப்ப மண்டல தாவர உயிரிகளின் நிலையான பயன்பாடு குறித்து சர்வதேச மாநாடு

அதிகரித்து வரும் ஆற்றல் தேவை மற்றும் படிம எரிபொருட்களின் வேகமான மறைவின் காரணமாக நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களில் இருந்து ஆற்றல் அபிவிருத்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

இவற்றை அடிப்படையாகக் கொண்டு வெப்ப மண்டல தாவர உயிரிகளின் நிலையான பயன்பாடு உயிரி செயலூக்கி, உயிரி தயாரிப்பு மற்றும் உயிரி சுத்திகரிப்பு என்னும் சர்வதேச மாநாடு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் வியாழன் (இன்று) மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் ரேடிசான் புளு ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் கு.ராமசாமி, அமைப்புச் செயலாளர் முனைவர் உ.சிவகுமார் ஆகியோர் தலைமைதாங்க உள்ளனர்.

இந்த மாநாடானது, சர்வதேச   மற்றும் தேசிய அளவிலான நிபுணர்களைக் கொண்ட அறிவியல் பூர்வமான மன்றத்தினை வழங்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



மாநாட்டின் ஆய்வுப் பகுதிகளாக உயிரி மற்றும் செல்முறை பொறியியல், உயிரி செயலூக்கி மற்றும் தீவிர நொதி, நொதித்தல் மற்றும் வளர்சிதை மாற்ற பொறியியல் மற்றும் உயிரித் தயாரிப்பு உணவு மற்றும் மருந்து ஆகியவை உள்ளன.

இதில், உலக அளவில் 400 பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தியா, ஸ்ரீலங்கா, ரஷ்யா, ஸ்வீடன், அயர்லாந்து மற்றும ஐக்கிய நாடுகளிலிருந்து வரும் பேச்சாளர்கள் வெப்ப மண்டல உயிரிகளின் பயன்பாட்டில் உள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகள் குறித்து பேசவுள்ளனர். 



இந்த சர்வதேச மாநாடானது கல்லூரி, பல்கலைக் கழகம், ஆய்வு நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் இளைய மற்றும் திறமை மிகுந்த ஆய்வாளர்கள் பங்களிப்பதையும், தொடர்புகொள்வதையும் ஊக்குவிக்கிறது.




Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...