ரயில் பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ள உதவி எண் அறிவிப்பு

ரயிலில் பயணச் சீட்டு பரிசோதகரை பல நேரங்களில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பயணிகள் தரப்பில் இருந்து தெற்கு ரயில்வேக்கு புகார் வந்தது. இதனையடுத்து பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ள பயணிகளுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ரயிலில் உயர் வகுப்புகள் அதாவது ஏசி முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்பவர்கள் பயணச் சீட்டு பரிசோதகர்களை ரயில் புறப்படும் 1 மணி நேரத்துக்கு முன்பாகவே நடைமேடையிலேயே தொடர்பு கொள்ளலாம்.

படுக்கை வசதிக்கு முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பாகவே பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ளலாம்.


இதைத் தொடர்ந்து, உயர் வகுப்பு ரயில் பெட்டி பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடம் முன்பாகவும், படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் 15 நிமிடம் முன்பாகவும் பயணச் சீட்டு பரிசோதகரை ரயிலிலேயே இனி எளிதில் அனுகலாம்.

அப்படியும் பயணச் சீட்டு பரிசோதகரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் உதவி எண்ணை அழைக்கலாம்:


தெற்கு ரயில்வே வர்த்தக பிரிவு : 044-25350308
ஹெல்ப் லைன் : 138
சென்னை கோட்டம் : 044-25354457, 9003061977
திருவனந்தபுரம் : 0471-2326484, 9567869375
சேலம் : 0427-2431010, 9600956230
பாலக்காடு : 0491-2552755, 9746763956
மதுரை : 0452-2308250, 9003862961
திருச்சி : 0431-2418992, 9003864966
தலைமை அலுவலகம், வர்த்தகப் பிரிவு
சிறப்பு அதிகாரி : 044-25354405

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...