கோவை மாநகராட்சியின் மூலம் இப்பகுதிகளுக்கு தீர்வு கிடைக்குமா?

வீணாய் போகும் குடிநீர்!

கோவை, ஹோப்ஸ் பகுதியையும், சிங்காநல்லுர் பகுதியையும் இணைக்கும் சாலையான காமராஜர் சாலையில் குடிநீர் குழாய் உடைந்த சாலையோரங்களில் வீணாக குடிநீர் செல்கிறது. அப்பகுதியில் நடந்து செல்லும் பொது மக்கள் சாலையோரமாக செல்வதற்கு இடையூறாக உள்ளதாக கூறுகின்றனர். இதனை சரிசெய்ய கோவை மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.



சாலை ஓரங்களில் வெட்டப்பட்ட மரம் அகற்றப்படவில்லை!

59வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் சாலையில் கடந்த தீபாவளி முன்பு பெய்த கன மழையால் அப்பகுதியில் சாலைஓரம் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது. பின்னர், சாலையில் போக்குவரத்து நெரிசலை  தவிர்ப்பதற்கு  உடனடியாக மரத்தை அகற்றுவதற்காக மாநகராட்சி பணிகளை மேற்கொண்டது. வெட்டப்பட்ட மரத்தை அப்பகுதியில் சாலையோரங்களில் போடப்பட்டுள்ளது. இன்னும் அதனை அகற்றப்படாமல் உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.



கரடு முரடான சாலை!

சிங்காநல்லூர், 63வது வார்டுக்கு உட்பட்ட பகுதியான தேவேந்தர் வீதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். 



அபாய நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி!

சிங்காநல்லூர், 63வது வார்டுக்கு உட்பட்ட தேவேந்தர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி ஒன்று உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தொட்டி மூலம் உப்புத்தண்ணீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி பராமரிக்கப்படாமல்  உள்ளதால் இடிந்து விழும் அபாய நிலையில் இருக்கிறது. இதனை சரிசெய்ய மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...