ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவன பேராசிரியர்களின் ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்திய பல்கலைக் கழக மானியக் குழு

பல்கலைக் கழக மானியக்குழு (யுஜிசி), கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் 5 பேராசிரியர்களுக்கு ஆராய்ச்சி நிதி உதவியினை வழங்கி தாங்கள் சமர்ப்பித்த ஆராய்ச்சித் திட்டங்களை செயல்படுத்த உதவியுள்ளது.

கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் செயல்படும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மூன்று பேராசிரியர்கள் ஆர்.சௌந்திரராஜன், சுஜரிதா மற்றும் பிரபா ஆகியோர் மூன்று ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்பித்ததற்கு பல்கலைக் கழக மானியக் குழு ஒப்புதல் அளித்தது. மேலும் அந்த ஆராய்ச்சித் திட்டத்தை மேற்கொள்ள ரூபாய் 4 லட்சத்து 70 ஆயிரம், 2 லட்சம், 95 ஆயிரம் என முறையே வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அதே வளாகத்தில் செயல்பட்டு வரும் கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் பிரசன்னாவிற்கு 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் ஆராய்ச்சி நிதியாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கோவைப்புதூரில் இயங்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் பொறியியல் துறை பேராசிரியர் சுந்தர்ராஜூக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ஆராய்ச்சியினை தொடர பல்கலைக் கழக மானியக் குழு வழங்கியுள்ளது.

இக்கல்விக் குழுமங்களின் பேராசிரியர்கள் மொத்தம் 11 லட்சத்திற்கும் மேல் ஆராய்ச்சி நிதியினைப் பெற்று பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர்.

இவர்களை இக்கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, முதன்மை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், இக்கல்விக் குழுமங்களின் முதல்வர்கள் ஜே.ஜேனட், ஏ.ரமேஷ், பி.பாபாஞானகுமார், துறைத் தலைவர்கள் ஆசோக்வர்த்தன், ஜெகதீஸ்குமார், நடராஜன், சுமதி உட்பட பலர் வாழ்த்து தெரிவித்து ஆராய்ச்சியினை மேற்கொள்ள ஊக்கப்படுத்தினர்.

Newsletter

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...