கோவை மாநகராட்சியும் அறம் அறக்கட்டளையும் இணைந்து குழந்தைகள் உதவி மைய அலுவலகம் துவக்கம்

கோவை மாநகராட்சியும் அறம் பொதுநல அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் குழந்தைகள் உதவி மையம் மற்றும் ஸ்மார்ட் ஸ்கூல்ஸ் திட்ட மையத்தின் அலுவலக திறப்பு விழா மாநகராட்சி ஆணையர் க.விஜய கார்த்திகேயன் தலைமையில் வியாழனன்று (இன்று) ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

குழந்தைகள் உதவி மையம்:-

கோவை மாநகராட்சியின் சார்பில் குழந்தைகள் உதவி சேவை எண் 81900 00300 செயல்பட்டு வருகிறது. இதற்கான உதவி மையத்தை அறம் பொதுநல அறக்கட்டளையின் குழு நிர்வகிக்கும். அந்த குழுவில் மனநல மருத்துவர், மனநல ஆலோசகர், சமூக சேவகர்கள் மற்றும் கல்வியாளர்கள் இம்மையத்திற்கு வரும் குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு ஏற்ப ஆலோசனைகளும் மற்றும் தீர்வுகளை நோக்கிய வழிமுறைகளும் இலவசமாக பரிந்துரைப்பார்கள்.

கோவை மாநகராட்சி பள்ளியில் இந்த மையம் செயல்படுவதால் அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும்.



ஸ்மார்ட் ஸ்கூல்ஸ் திட்ட மையம்:-

கோவை ஸ்மார்ட் நகரம் ஆவதால் கோவையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தும் பொருட்டு கோவை மாநகராட்சியும் அறம் பொதுநல அறக்கட்டளையும் இணைந்து கணேசபுரம் மாநகராட்சி ஆரம்ப பள்ளியை மாதிரி பள்ளியாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. 

இப்பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகள், நவீன கற்பிக்கும் முறைகள், சிறந்த பள்ளிவளாக கட்டமைப்பு வசதிகள், பசுமை வளாக திட்டங்கள், காய்கறி மற்றும் பூந்தோட்டம், ஆரோக்கியமான உடல் மற்றும் மன வளர்ச்சிக்கான செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இவை அனைத்தும் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், அறம் பொதுநல அறக்கட்டளையின் பல்வேறு சமூகநல  பணிகளை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். கோவை மாநகராட்சியும் அறம் பொதுநல அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ''ஹாப்பி சைல்ட் மற்றும் ஸ்மார்ட் ஸ்கூல்'' வெற்றி படி திட்டங்கள் நாட்டின் சிறந்த 100 திட்டங்களில் skoch award'' பெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...