கேரளாவில் தெருநாய்களுக்கு பயந்து ஓடிய சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

கேரளாவில் தெருநாய்களுக்கு பயந்து ஓடிய சிறுமி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் தெருநாய்களின் தொல்லையானது அதிகரித்து காணப்படுகிறது. தெருநாய்கள் கடித்து அவ்வபோது உயிரிழப்பு சம்பவமும் நேரிட்டு வருகிறது. கிராம புறங்களிலும் அதிகமான நாய்கள் திரிகிறது, இதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சிகளும், உள்ளூர் மக்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தெருநாய்கள் பிடித்துக் கொல்லப்பட்டு வருகிறது. தெருநாய்களின் தொல்லை தாங்க முடியாமல் கொல்லப்பட்டு வருகிறது. மறுபுறம் கொலை செய்யப்படுவதற்கு விலங்குகள் நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிப்பது என நீண்டுக்கொண்டு உள்ளது பிரச்சனை.

இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வருகிறது. கண்காணிப்புக் குழுக்களிடம் நாய்களை கொல்வதை நிறுத்துங்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக் கொண்டு உள்ளது.

இந்நிலையில் தெருநாய்களினால் மாநிலத்தில் மேலும் ஒரு உயிரிழப்பு நேரிட்டு உள்ளது.

கந்தன்கோடு மேம்பரம்பாது பகுதியை சேர்ந்த ஹரிதாசன் என்பவரது 15 வயது மகள் கிரிஸ்மா இன்று காலை கடைக்கு பால் வாங்க சென்று உள்ளார். பால் வாங்கிவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது தெருநாய்கள் மொத்தமாக நின்று உள்ளன. மொத்தமாக நின்ற தெருநாய்கள் கிரிஸ்மாவை நோக்கி பாய்ந்து உள்ளது. நாய்கள் மொத்தமாக வருவதை பார்த்து மிரண்ட கிரிஸ்மா பயந்து ஓட தொடங்கிவிட்டார். பயந்து ஓடிய கிரிஸ்மா தடுப்பு சுவர் இல்லாத கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துவிட்டார். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து அவருடைய உடலை மீட்டனர். அவருடைய சடலமானது கண்ணம்குளம் தாலுகா அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...