சசி கிரியேட்டிவ் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் சார்பில் ஓவியப் போட்டி

சசி கிரியேட்டிவ் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் கோவையில் அமைந்துள்ள ஒரு முன்னணி கட்டிட வடிவமைப்பு கல்லூரி ஆகும். இதன் சார்பாக 5ம் ஆண்டு ''சித்திரம் 2016'' என்னும் ஓவியப் போட்டி நடைபெறவுள்ளது.

இந்தியாவின் விழாக்கள் என்னும் தலைப்பில் வரும் நவம்பர் 22ம் தேதியன்று காலை 9.30 மணி முதல் பகல் 3.30 மணி வரை அக்கல்லூரி வளாகத்தில் இப்போட்டி நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் 350க்கும் மேற்பட்ட கல்லூரிகள் பங்குபெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போட்டிக்கான சிறப்பு விருந்தினராக கலை ஹவுஸ் செயல்திட்ட மேலாளர் பிரிஜெட் சிபு பங்குபெற உள்ளார். சசி கிரியேட்டிவ் ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சரின் நிறுவனர் ஆர்.சுவாமிநாதன், அவரது மனைவி ராஜலட்சுமி சுவாமிநாதன், அரங்காவலர் சுச்சி ராஜ்தீபன் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்ள உள்ளனர். பேராசிரியர் முகமது அலி சாரிப் இப்போட்டிக்கு தலைமை தாங்க உள்ளார்.

மாணவர்களின் படைப்புகள் நிபுனர் குழுவால் மதிப்பிடப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. ஓவியப் போட்டிகள் மட்டுமின்றி மலர்களைக் கொண்டு ஓவியம் உண்டாக்குதல், துணிகளுக்கு வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...