பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இருவர் கைது

கோவை, கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் விடுதியில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக காட்டூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, உதவி ஆய்வாளர் பாலகன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் அந்த விடுதிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு அறையில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

பின், இதில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த 29 வயது பெண்ணை காவல் துறையினர் மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதில் ஈடுபட்டிருந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த ராஜா (37) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த அசோகன் (47) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...