வால்பாறை வனத்தில் காட்டெருமை விரட்டியதால் வனக்காப்பாளர் உயிரிழந்தார்


வால்பாறை வனச்சரகம் அக்காமலை புல்லுமேடு பகுதியில் செவ்வாயன்று காட்டெருமை விரட்டியதால் நெஞ்சுவலி ஏற்பட்ட வனக்காப்பாளர் சங்கிலிப்பாண்டி என்ற கணபதி (57) உயிரிழந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து வால்பாறை வனக்காப்பாளர் திருமலைசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில் கூறியுள்ளதாவது :- 

அக்காமலை பகுதியில் எனது தலைமையில் தர்மராஜ், சங்கிலிப்பாண்டி ஆகியோர் கோனலாறு வேட்டைத் தடுப்பு முகாமிற்கு நேற்று காலை சென்றோம் . ரோந்து பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக காட்டெருமை விரட்டியது. இதில் மூன்று பேரும் சிதறி ஓடினோம். 

பிறகு சங்கிலிபாண்டியை காணவில்லை. அவரை தேடி மீட்டபோது நெஞ்சு வலிப்பதாக கூறினார். நாங்கள் அவரை உடனே வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தோம். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர்'' என கூறியுள்ளார்.

இச்சம்பவத்தை அடுத்து வால்பாறையில் உள்ள மானாம்பள்ளி வனச்சரக அலுவலகத்தில் குவிந்த வேட்டை தடுப்பு காவலர்கள் பணியின் போது உயிரிழந்த வேட்டை தடுப்பு காவலருக்கு ரூ.5 லட்சம் வழங்க வலியுறுத்தி வால்பாறை வனச்சரகர் சக்திவேலை நேற்று முற்றுகையிட்டனர். இச்சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். 

ஆனால், வனக்காவலர்கள் வனச்சரகர் மற்றும் வனவர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு, இறந்தவருக்கு வனத்துறை இழப்பீடு வழங்கினால் மட்டுமே நாங்கள் உடலை எடுத்துச் செல்வோம் என வனத்துறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டனர். 

இதைத்தொடர்ந்து புதனன்று (இன்று) வால்பாறை, மாணாம்பள்ளி, டாப்சிலிப் சரகத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தி 5 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுப்பதாக ஒப்புக்கொண்டு முதல் தவணையாக ரூ.25 ஆயிரம் கொடுத்தனர். அதன் பிறகு உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின் சங்கிலிபாண்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...