பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கோவைக்கு வருகை.


பாரத ஸ்டேட் வங்கி பெரு முதலாளிகள் 63 பேரின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லை எனவும் அவர்களது வங்கி கணக்குகளை துல்லியமாக கண்காணித்து வருவதாகவும் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி  பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது முதல் தற்போது வரை பாரத ஸ்டேட் வங்கியில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே வங்கியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். 100 ரூபாய் நோட்டுகள் வங்கியில் போதுமான அளவு இருப்பு உள்ளதாகவும் 500 ரூபாய் புழக்கம் இல்லாததாலேயே பணப்புழக்கத்தில் பிரச்சிணை ஏற்பட்டுள்ளதாகவும் கூறிய அருந்ததி பட்டாச்சார்யா தற்போது ரிசர்வ் வங்கி அதிகளவிலான புதிய 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்கு வழங்கியுள்ளதால் விரைவில் சகஜ நிலை திரும்பும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல் பாரத ஸ்டேட் வங்கி 63 தொழிலதிபர்களின் வாரா கடன்களை தள்ளுபடி செய்யவில்லை எனவும் அவர்களிடமிருந்து கடன்களை வசூலிக்கும் வகையில் அவர்களது வங்கி கணக்குகளை கண்காணித்து வருவதாகவும் கூறினார். நாடு முழுவதும் இது வரை மாற்றப்பட்டுள்ள மொத்த பணத்தில் மூன்றில் ஒரு பங்கு ஸ்டேட் பாங்கில் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் பொதுமக்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்துவது பெருமளவு குறைந்துள்ளதால் விரைவில் நிலைமை சீரடையும் என நம்பிக்கை தெரிவித்தார். வங்கி பரிவர்த்தனைகளை அதிகரிப்பதே தொழில் முனைவோருக்கு அதிக அளவு லாபத்தை ஏற்படுத்தும் எனக்கூறிய அவர் மத்திய அரசின் இந்த திட்டத்தை முழுமையாக வரவேற்பதாகவும் தெரிவித்தார். கோவையில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அருந்ததி நாளை செய்தியாளர் சந்திப்பிலும் பேசவுள்ளார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...