இனி வங்கியில் மட்டுமே 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியும்..!


கருப்புப் பணம் ஒழிப்பு, கள்ள  நோட்டுகள் ஒழிப்பு என்ற பெயரில் மத்திய அரசால் கடந்த நவம்பர் 8ம் தேதி முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அந்த ரூபாய் நோட்டுகளை பெட்ரோல் பங்க், தபால் நிலையங்கள், மின் கட்டணம் செலுத்துதல், மாநகராட்சி வரி செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. அதற்கான காலவரம்பு நவம்பர் 24ம் தேதி (இன்று) நள்ளிரவுடன் முடிவடைகிறது.

இனி பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற அல்லது டெபாசிட் செய்ய வங்கிகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும். டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் தங்களது கணக்குகளில் இந்த செல்லாத ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்யலாம். வங்கிக் கணக்கு இல்லாவிட்டால் புதிய கணக்கைத் தொடங்கியும் அதில் டெபாசிட் செய்யலாம். 

டிசம்பர் 30-ஆம் தேதிக்குப் பிறகும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்தால், அதை 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் மற்றும் குறிப்பிட்ட சில வங்கிகளின் கிளைகளில் மட்டும் கொடுத்து பொதுமக்கள் மாற்றிக் கொள்ளலாம். அந்த வங்கிகளின் விவரம் விரைவில் வெளியாகும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இன்று ஒருநாளைக்கு எங்கு பயன்படுத்தலாம்?

1. அரசு மருத்துவமனைகள்

2. பெட்ரோல் விற்பனை நிலையங்கள்

3. மருந்தகங்கள், பால் அங்காடி

4. நுகர்வோர் கூட்டுறவுக் கடைகள்

5. தகன மேடை

6. ரெயில் டிக்கெட்டுகள்

7. அரசு பஸ் போக்குவரத்து

8. விமான டிக்கெட்

9. மின்சாரம், தண்ணீர் கட்டணம், சமையல் கேஸ் சிலிண்டர்கள் கட்டணம்

10. பிரதான இடங்களுக்கான நுழைவுச்சீட்டுகள் பெறுமிடங்கள்

உள்ளிட்ட இடங்களில் மட்டும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை இன்று இரவு வரை பயன்படுத்த முடியும்.

Newsletter

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...

காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற...

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...