அன்பான குடும்ப சூழல் வழங்க வேண்டும் என்பதையே குழந்தைகள் உரிமை சாசனம் வலியுறுத்துகிறது என ஆட்சியர் தகவல்

அனைவருக்கும் அன்பான அரவணைப்பான குடும்ப சூழல் வழங்க வேண்டும் என்பதையே குழந்தைகளுக்கான உரிமை சாசனம் வலியுறுத்துகிறது என குழந்தைகளுக்கான மாற்று பராமரிப்பு முறைகள் குறித்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசினார்.

கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம், அண்ணபூர்னா கலையரங்கில் ஜக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் இந்திய குழந்தைகள் நலசங்கங்கள் இணைந்து நடத்தும் மண்டல அளவிலான குழந்தைகளுக்கான மாற்று பராமரிப்பு முறைகள் குறித்த மூன்று நாள் கருத்தரங்கு துவக்கவிழா நிகழ்ச்சி முன்னாள் அரசு முதன்மை செயலர் பி.நிர்மலா முன்னிலையில் நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த கோவை மாவட்ட ஆட்சியர், நிகழ்ச்சியினை துவக்கி வைத்து பேசியதாவது:-

குழந்தைகள் நல்லமுறையில் குடும்பங்களில் வளர்வதற்காக சூழலை பெற்றோரும், அரசும், தன்னார்வ தொண்டு அமைப்பினர்களும் உருவாக்க முணைய வேண்டும் என்பதே இக்கருத்தரங்கின் நோக்கமாகும். எல்லா குழந்தைகளும் குடும்பத்தில் பெற்றோரின் அன்பான அரவணைப்பில் வளர்வதற்கான உரிமை உண்டு. தற்போது உள்ள சூழலில் எல்லா குழந்தைகளுக்கும் குடும்பத்தில் வளர்வதற்கான சூழல் இல்லாமல் போவதை நாம் காண்கிறோம்.

தொடரும் போர்கள், வன்முறை சமுதாய கலவரங்கள், நோய்கள், மாறிவரும் சமூகக் கட்டமைப்புகளால் சிதறுண்டு போகும் குடும்ப அமைப்பு முறை, வேலை தேடி இடம் பெயரும் நெருக்கடி, குடும்பத்திற்குள் நடைபெறும் வன்முறைகள் என்று பல காரணிகாளால் குடும்பங்கள் உடைந்து குழந்தைகள் அனாதைகள் ஆக்கப்படுகிறார்கள் அல்லது புறக்கணிக்கப்படுகிறார்கள்.

பல்வேறு காரணங்களால் முறையான கவனிப்பும் பெற்றோரின் அரவணைப்பையும் பெற இயலாத குழந்தைகளின் பாதுகாப்பு உரிமைகளை உறுதி செய்வதற்கான அடிப்படை கருத்துக்களையும் உத்திகளையும் பற்றி சிந்திக்க வேண்டியது இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமாகிறது.

தற்போது குழந்தைகளுக்கான மாற்று பராமரிப்பு முறைகள் குறித்து ஆய்வு செய்வதும் இம்முறைகளைக் குறித்து மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இவ்வகையான மாற்று பராமரிப்பு முறைகளை நடைமுறையில் கொண்டு வருவதற்கான நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்குவதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும் முதல் முறையாக இந்தியாவில் இளைஞர் நீதி சட்டம் 2015-ல் தான் அனைத்து குழந்தைகள் இல்லங்களும் அரசாங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் செய்யத் தவறினால் சட்டரீதியான நடவடிக்கையும் தண்டனையும் உண்டு என்றும் கூறுகிறது. இது ஒரு வரவேற்கத்தக்க ஆரம்பமாகும்.

குழந்தைகளுக்கு ஒரு குடும்பம் வேண்டும், பெற்றோரின் அன்பும் ஆதரவும் வேண்டும் என்ற அடிப்படை உரிமை சார்ந்த காரணத்தினாலேயே குழந்தையின் உரிமையை நிலைநாட்ட இது போன்ற கருத்தரங்கு ஒரு சிறந்த கருவியாக உள்ளது.

குழந்தைகளே நம் எதிர்காலம் என்ற கருத்து உண்மையிலேயே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுமேயானால் குழந்தைகளை செவ்வனே வளர்வதற்கும், அவர்களது குழந்தைப் பருவம் பாதுகாக்கப்படுவதற்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இது அரசாங்கம் மட்டுமே தனித்து செய்து முடிக்க வேண்டிய பணியன்று, சமூக உறுப்பினர்கள் அனைவரும் அவரவர்களுக்கு ஏற்ற முறையில் பங்களிப்பது இன்றியமையாதது ஆகும். அதற்கான தங்களது பங்களிப்பினை சிறப்பாக வழங்க வேண்டும்'' என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

இக்கருத்தரங்கில் இந்திய குழந்தைகள் பாதுகாப்பு தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் சந்திரா தணிகாச்சலம், பொது மேலாளர் கிரிஜாகுமாரபாபு மற்றும் 11 மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தைகள் பாதுகாப்புத்திட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...