போக்குவரத்து விதி மீறல்கள் வழக்கு எண்ணிக்கை குறைப்பு : துணை ஆணையர் சரவணன் தகவல்.


5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து போக்குவரத்து விதிமீறல்கள் வழக்கு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் நமக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது :-

கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி,  நாள் ஒன்றிற்கு 650 முதல் 7௦௦ வழக்குகள் பதியப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வந்தது.

5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை கடந்த 8ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது. அன்று முதல் மக்களிடம் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதம் வசூலிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அத்தகைய வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவது குறைக்கப்பட்டுள்ளது. தற்போது நாள் ஒன்றிற்கு  40 முதல் 50 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுபவர்கள் மீதே இந்த வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

 கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் நாடு முழுவதும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...