கேரளத்தில் கொல்லப்பட்ட 3 மாவோயிஸ்ட்டுகள் குறித்து நீதி விசாரணை நடத்த கோவையில் பிடிபட்ட மாவோயிஸ்ட்டுகள் கோரிக்கை

கேரள மாநிலத்தில் 3 மாவோயிஸ்ட்கள் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டுமெனவும் கோவையில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக உள்ள மாவோயிஸ்ட்டுகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் வலியுறுத்தினார்.



கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015 ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தினர் ரூபேஸ், சைனா, வீரமணி, கண்ணன், அனூப் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட விரோத செயல்கள் தடுப்புசட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு  கோவை முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்த குற்றப்பத்திரிகைகளின் சுமார் 4200 பக்க நகல்கள் மாவோயிஸ்ட் இயக்கத்தினருக்கு வெள்ளியன்று (இன்று) வழங்கப்பட்டது. 

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகின்ற டிசம்பர் மாதம் 8 ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி பொறுப்பு கிறிஸ்டோபர் உத்தரவிட்டார். 



இதற்கு முன்னதாக, நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட மாவோயிஸ்ட்கள், கேரளாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தினர் 3 பேரை சுட்டுக்கொன்றதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். சுட்டு கொல்லப்பட்ட 3 பேரும் போலி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டுமென முழக்கங்களை எழுப்பினர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற பிறகு மாவோயிஸ்ட்கள் 5 பேர் மீதும் காவல் துறையினர் போலி ஆவணங்களை பயன்படுத்து சிம்கார்டு வாங்கியதாக தமிழகம் மற்றும் கேரளாவில் மொத்தம் 28 பொய் வழக்குகள் போடப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் மீது குற்ற வழக்குகள் இல்லாத போதும் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் வழக்குகள் போடப்பட்டு இருப்பதாகவும் அவர்களது தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்தார். 

மேலும், மாவோயிஸ்ட்டுகள் மீது சிறையில் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனவும், உரிய அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமெனவும் நீதிபதியிடம் மாவோயிஸ்ட்கள் புகார் தெரிவித்ததாகவும், சிறை கண்காணிப்பாளர் மூலம் புகார் தெரிவிக்குமாறு நீதிபதி அறிவுறுத்தியதாகாவும் அவர் தெரிவித்தார். 

இதையடுத்து மாவோயிட்கள் 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...