காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை


கோவையில் காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கலிக்கநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் சுபாஷ் (19). இவர் கோவையை அடுத்த கணியூரில் உள்ள தனியார் ஆலை ஒன்றில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்த சுபாஷ், சக ஊழியர்கள் நான்கு பேருடன் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்த சக ஊழியர்கள் அனைவரும் வேலைக்கு சென்றுவிட சுபாஷ் மட்டும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். மேலும், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலைக்கு சென்றவர்கள் வீடுதிரும்பிய போது, சுபாஷ் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி போலீசார் சுபாஷின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, சுபாஷ் எழுதிய கடிதம் ஒன்று போலீசாரிடம் கிடைத்தது. அதில், காதல் தோல்வியால் தான் தற்கொலை செய்து கொள்வதாக சுபாஷ் எழுதியுள்ளார். இதுகுறித்து, வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...