மறுபிறவி எடுத்த சாலையோர மரங்கள்..!

பொள்ளாச்சி சாலையினை விரிவுபடுத்துவதற்காக கடந்த மாதம் கோவை முதல் பொள்ளாச்சி வரை சாலை ஓரத்தில் இருந்த மரங்களை வெட்டுவதற்கு மாநகராட்சி பணியை தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மரங்களின் அழிவில் இருந்து மீட்க கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயனை சந்தித்தனர்.



அதன்பின், சாலையோர மரங்களை வேரோடு எடுத்து மாற்று இடத்தில் மரங்களை நடுவதற்கு மாநகராட்சி ஆணையர்  உத்தரவு வழங்கினார். இந்த முயற்சியில் சாலையோர மரங்களை ஈச்சனாரி சாலையில் உள்ள ரத்தினம் கல்லாரியில் நடுவதற்கு அந்நிறுவனத்தினர் அனுமதி அளித்தனர். 



அதனைத் தொடர்ந்து, சுந்தராபுரம் சாலையோர பகுதியில்   இருந்த மரங்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் வேருடன் அகற்றப்பட்டு,  ரத்தினம் கல்லூரியில் நடப்பட்டது. 

அந்த மரங்கள் ஊழியர்களின் தொடர் கணிப்பு மற்றும் பராமரிப்பால் தற்போது மறுபிறவி எடுத்ததைபோல் வளர தொடங்கியுள்ளது.



மரங்களை வெட்டி அதனை அழிக்கும் முயற்சியில் இருந்து மீட்டெடுத்து தற்போது அந்த மரங்கள் நல்ல முறையில் துளிர்விட்டு வளர்வது அதனை மீட்ட தன்னார்வலர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...