கோவை மதுக்கரையில் ரயில் மோதி ஆண் காட்டு யானை பலி


கேரளாவிற்கு உட்பட்ட பாலக்காடு வாளையாறு வனப்பகுதியிலும் இதையொட்டியுள்ள கோவை மாவட்டத்தின் மதுக்கரை வனப்பகுதியிலும் காட்டுயானைகள் அதிகளவில் உள்ளன. இந்த வனப்பகுதி வழியாக செல்லும் தமிழகம் - கேரளம் இடையிலான ரயில்பாதையே, யானைகள் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் ரயிலில் மோதி யானைகள் இறக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை சுமார் 7.05 மணியளவில் பாலக்காட்டிலிருந்து வாளையாறு, மதுக்கரை வழியாக கோவை நோக்கி பயணிகள் ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது வாளையாறு வனப்பகுதியில் உள்ள வட்டக்காடு என்ற இடத்தில் யானைகள் கூட்டம் ரயில் பாதையை கடந்து செல்ல முயன்றது. இதனிடையே, ரயில் வேகமாக வந்து கொண்டிருந்ததால், கடைசியாக வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று எதிர்பாராத வகையில் ரயிலில் சிக்கியது. 



ரயிலின் என்ஜின் மோதியதில் பலத்த காயமடைந்த யானை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. யானை உயிரிழந்தது குறித்து ரயில்வே அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், கேரள வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு நடத்தினர். விபத்து நடைபெற்ற இடத்திலேயே யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி, அடக்கம் செய்யப்படும் என வனத்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.

யானைகள் இறப்பைத் தடுக்க மதுக்கரை - வாளையாறு வனப்பகுதியில் மணிக்கு 30 கி.மீ வேகத்துக்கும் குறைவாகவே ரயிலை இயக்க வேண்டுமென தமிழக, கேரள வனத்துறையினர் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்திடன் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், அவ்வப்போது அந்த வேகக் கட்டுப்பாடு மீறப்படுவதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு வருவதாக சூழலியல் செயல்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

மதுக்கரை - வாளையாறு இடையேயான வனப்பகுதியில் கடந்த 5 மாதங்களில் இதுவரை 4 யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...