ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமம் சார்பில் உடல் பருமன் எதிர்ப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிப்பு


உடல் பருமன் எதிர்ப்பு  விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் நவம்பர்  26ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமத்தின் சார்பில் உடல் பருமன் எதிர்ப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.



ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரியில் 136.1 யோகா அமைப்பும் ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமமும் இணைந்து நடத்திய இந்த உடல் பருமன் எதிர்ப்பு யோகா நிகழ்ச்சியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று யோகாவில் ஈடுபட்டனர்.



இந்நிகழ்ச்சியில், யோகா வல்லுநர் லோகேஷ்வரி அனைவரையும் வரவேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

அதிகப்படியான உடல் எடையும், பருமனும் மற்ற உயிரைப் பறிக்கும் நோய்களைப் போன்றதே. ஆண்டிற்கு சுமார் 2.8 மில்லியன் மக்கள் அதிகப்படியான உடல் பருமன் காரணமாக உயிரிழக்கின்றனர். மற்ற உயிர்கொள்ளும் நோய்களுக்கு உடல் பருமனும் ஒரு பாதையாக அமைகிறது. உடல் பருமனுக்காக தகுந்த சிகிச்சை பெறாமல் இருந்தால் புற்றுநோய், இருதய நோய், இரத்த அழுத்தம், கொழுப்புகள் அதிகரித்தல், தூக்கமின்மை உள்ளிட்ட நோய்கள் எளிதில்  தாக்கும் அபாயம் உள்ளது. உடல் பருமன் காரணமாக பெரும்பாலான மக்கள் மன அழுத்தமும், உலவியல் ரீதியான வேதனையையும் சந்தித்து வருகின்றனர். ஆரோக்கியம் மற்றும் கட்டுப்பாடான உணவும், தகுந்த பயிற்சியுமே இதற்கான சிறந்த சிகிச்சை என பல்வேறு ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகப்படியான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடற்பயிற்சியும், உணவு பழக்கங்களுமே இதற்கு காரணம். இந்தியாவில் ஐந்தில் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சுமார் 41 மில்லியன் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, குழந்தைகளும் இந்த நோயினால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

மக்கள் தங்களது உடல் எடை மற்றும் பருமன் குறித்து பி எம்  ஐ மூலம் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். கலோரிகள் நிறைந்த  நல்ல உணவுகளை உட்கொள்ள வேண்டும். பசிக்கும் நேரத்தில் மட்டுமே உணவுகளை உட்கொண்டு தகுந்த உடற்பயிற்சிகள், நடைபயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்வது அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் மருத்துவ சிகிச்சைகள் இன்றி சிறப்பான உடல் ஆரோக்கியத்தினை பெற முடியும்'' என லோகேஷ்வரி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியினை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழும தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மலர்விழி துவக்கி வைத்தார். ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஏ.ரமேஷ், யோகா ஆசிரியர் ரிஷிகுமார் சந்தோஷ், 136.1 யோகா அமைப்பின் இயக்குநர் வி.செந்தில் குமார், பேராசிரியர் சி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...