கோவையில் அரசு உத்தரவுப்படி மூடப்பட்ட பள்ளிகள் தற்போது அனுமதியின்றி செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சியினர் புகார்

கோவை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு தனியார் பள்ளிகள் அரசின் முறையான அனுமதி பெறாமல் செயல்படுவதாகவும், அவ்வாறு செயல்படும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டும் தற்போது எவ்வித உத்தரவுமின்றி செயல்படுவதாகவும் கூறி கோவை மாவட்ட ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ரஃபி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

அனுமதி பெறாததாலும், முறையான கட்டமைப்பு இல்லாததாலும், முறைப்படி அனுமதியினை புதுப்பிக்காததாலும் தமிழக அரசு உத்தரவுப்படி அன்றைய கோவை மாவட்ட ஆட்சியராக செயல்பட்ட கருணாகரன் பல பள்ளிகளை மூட உத்தரவிட்டார். 

இருப்பினும் தற்போது அந்த பள்ளிகள் எவ்வித அனுமதியும் இன்றி செயல்பட்டு வருகிறது. இது மாவட்டக் கல்வித் துறைக்கு தெரிந்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. பெற்றோர்களும் இதுகுறித்து அறியாமல் தங்களது குழுந்தைகளை அந்த பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். பள்ளி நிர்வாகம் ஆயிரக்கணக்கான ரூபாயினை பெற்றோர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு முறைப்படி அனுமதியின்றி செயல்பட்டு வருகிறது.

எனவே, கோவை மாவட்ட ஆட்சியர் அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டு அனுமதி புதுப்பித்தல், ஆய்வகம், கழிப்பறை, சுற்றுச் சுவர் போன்ற அடிப்படை வசதிகள் முறைப்படி உள்ளனவா ? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

அனுமதி பெற்ற பள்ளிகள் தங்களது அங்கீகாரம் பற்றிய அனுமதிக் கடிதத்தை தகவல் பலகையில் பெற்றோர்களுக்கு தெரியும் வகையில் அமைக்க வேண்டும்.

கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் பல பள்ளிகளில் இட ஒதுக்கீடுகள்  செய்யப்படுவதில்லை. அதனை ஆய்வு செய்து இடஒதுக்கீட்டினை உறுதிசெய்ய வேண்டும்.

அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமிராவினை பொருத்த காட்டாயப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...