ஓய்வூதியதாரார்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் ஓய்வூதியதாரார்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. 



 அதில், 2016ம் ஆண்டில் அமல்படுத்தும் வகையில் 8வது ஊதியக்குழுவை அமைத்தல், வல்லுநர் குழு அறிக்கையை  உடனடியாக வெளியிடுதல், புதிய பங்களிப்பு ஓய்வூதியத்திட்டத்தை இரத்து செய்தல், முதல்வர் மற்றும் நிதியமைச்சர் ஆகியவர்களால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அடையாள அட்டையை வழங்குதல், இராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு இரட்டை குடும்ப ஓய்வூதியம் வழங்குதல், புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பாடு மறுக்கப்படும் நிலையில், கட்டாய ஓய்வூதியம் பிடித்தம் செய்வதிலிருந்து விலக்களித்து திட்டத்திலிருந்து விலகுவதற்கு அனுமதி அளித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இதில், கோவை மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ரங்கராஜ், மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், பொருளாளர் ராஜேஸ்வரன், முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், கிளைத் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 16 மையங்களில் இன்று நீட் தேர்வு: 7,181 பேர் பங்கேற்பு

கோவை மாவட்டத்தில் இன்று நடைபெறும் நீட் (NEET) நுழைவுத் தேர்வில், 16 மையங்களில் 298 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 7,...

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...