ஜெயலலிதாவின் மகள் என்ற வதந்தியால் மனவேதனையடைந்த திவ்யா குடும்பம்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த சம்பவம் தமிழக மக்களை பெருத்த மனவேதனையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் மறைந்த ஜெயலலிதாவின் உண்மை மகள் இவர்தான் என திவ்யா ராமநாதன் வீரராகவன் என்ற பெண்ணின் புகைப்படம் வேகமாக பரவி வருகிறது. இதனால், அந்த பெண்ணின் குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.

பார்ப்பதற்கு ஜெயலலிதாவைப் போலவே தோற்றமளிக்கும் அந்த பெண் குறித்த புகைப்படங்கள் கடந்த 2014ம் ஆண்டு முதலே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து அவரது குடும்பத்தினரும் பலமுறை மறுப்பு தெரிவித்து வெளியிட்ட தகவல்கள் மக்களிடம் முழுமையாக சென்றடையவில்லை.

இதுகுறித்து பிரபல பின்னணி பாடகியும், திவ்யா ராமநாதன் வீரராகவன் உறவினருமான சின்மயி ஸ்ரீபதா தற்போது சமூகவலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், இப்புகைப்படத்தில் உள்ள திவ்யா ராமநாதன் வீரராகவன் என்னுடைய உறவினர். இவரை எனக்கு சிறுவயதில் இருந்தே தெரியும். ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் வசித்து வரும் இவரைக் குறித்து சில காலமாக சமூக பக்கத்தில் மறைந்த ஜெயலலிதாவின் மகள் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், ஜெயலலிதாவிற்கும் இவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதை எனது உறவினர்களும், நண்பர்களும் மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.



இதைத்தொடர்ந்து இசைக் கலைஞர் வித்வான் வி.பாலாஜி வதந்திகுறித்து சமூக வளைதளத்தில் சின்மயி ஸ்ரீபதா பதிவுசெய்த கருத்தை பகிர்ந்தார். மேலும் அந்த பதிவில், இத்துடன் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் என நம்புவதாகவும், இதனால் அந்த பெண்ணின் குடும்பம் ஊடகங்களின் பாரவையில் இருந்து தப்பும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...