கல்லூரி பேராசிரியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

கோவை அரசு தொழில் நுட்பக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர் சேகர். இவரது மனைவி ராணி. இவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 27 ம் தேதி திண்டிவனத்தில் உள்ள உறவினர் இறந்ததால் சேகர் தனது குடும்பத்தோடு திண்டிவனம் புறப்பட்டுசென்றார்.  

தொடர்ந்து, இன்று காலை சேகர் மட்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சேகர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.   

இது தொடர்பாக, சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் கை ரேகை நிபுணர்களின் உதவியோடு தகவல்களை சேகரித்தனர். 

 இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

இது தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பல நாட்கள் நோட்டமிட்ட பின்னரே இந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். 

அரசு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து 50 சவரன் நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியினரிடையே  பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...

12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை...

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...