மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்து விற்பனை செய்யும் மருந்தகத்தின் உரிமம் ரத்து செய்யப்படுமென எச்சரிக்கை


கோவையில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்யும் மருந்துக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படுமென மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் தமிழ்மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இணை இயக்குநர் தமிழ்மணி கூறுகையில், 

மருந்தங்கள் மற்றும் மருந்து கடைகளில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் எந்த மருந்துகளையும் விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். 

குறிப்பாக வலி நிவாரணி மற்றும் வலி நீக்க மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது எனவும், வலி நீக்க மருந்துகளை மருத்துவர்களின் கண்காணிப்பு இல்லாமல் உட்கொள்வதால் சிறுநீரகம் மற்றும் ஈரல் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

மேலும், இந்த விதிமுறையை கடுமையாக அமல்படுத்தும் வகையில் ஒரு உதவி இயக்குநர் மற்றும் 6 மருந்து ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், மாவட்டம் முழுவதும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

மருந்துகள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் பெட்டிக்கடைகள் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் இருப்பதாகவும், போதியளவு மருந்துகள் கையிருப்பு இருப்பதாகவும் கூறிய அவர், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...