பேய்கள் நடமாடும் நேரத்தில் கோவில்களில் புத்தாண்டு தரிசனத்தை தடுக்க ஆட்சியரிடம் ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் மனு

பேய்கள் நடமாடும் இரவு 12 மணி நேரத்தில் கோவில்களில் புத்தாண்டு தரிசனம் செய்வதை தடுக்க வேண்டும் எனக் கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் ராஜரத்தினம் என்கிற வினோத் மனு அளித்துள்ளார். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-



"வருகிற டிசம்பர் 31-ஆம் தேதியன்று இரவு புத்தாண்டு என்கின்ற பெயரில் அன்று இரவு கேளிக்கை விடுதிகளில் மது அருந்திவிட்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக சென்று சாலை விபத்துகளை ஏற்படுத்துவோர் மீதும், இதன் மூலம் கலாச்சார சீரழிவு செய்துவரும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு முடக்க வேண்டும்.

இந்து ஆகம விதிப்படி இரவு 12 மணி நேரத்தில் பேய்கள் நடமாடும் நேரத்தில் புத்தாண்டு தரிசனம் என்கிற பெயரில் தமிழக அரசாங்கத்தின் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள ஒரு சில கோவில்களில் இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

அந்த நேரத்தில் கோவில்களை திறக்கக் கூடாது, அது நம் அழிவிற்கு காரணமாக அமையும். அதனால், இதுபோன்ற இந்து விரோத செயல்களை தடுத்திட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்". இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...