வாலிபர் சங்கத்தினரை தாக்கிய சென்னை காவல் துறையினரைக் கண்டித்து வாலிபர் மற்றும் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஏ டி எம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய சென்னை பள்ளிக்கரனை காவல்துறையினரைக் கண்டித்து கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பணமில்லாத ஏ டி எம் மையங்களில் பணத்தை நிரப்ப வலியுறுத்தி கடந்த சனியன்று சென்னை மேடவாக்கத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பள்ளிக்கரனை காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். 

இந்த சம்பவத்தைக் கண்டித்து வாலிபர் மற்றும் மாணவர் சங்கங்கள் சார்பில் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் சென்னை பள்ளிக்கரனை காவல்துறையினரின் அராஜக நடவடிக்கையைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல்துறையினரை கைது செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். 

மேலும், அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம், துணிந்து நின்று போரிடுவோம் என்கிற ஆவேச முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...