திரவத் தாரின் அளவுகளில் 10 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் தகவல்

கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் புதியதாக தார் சாலைகள் அமைத்தல், குழாய்கள் பதித்தல், இணையதள வடங்கள் அமைத்தல் மற்றும் பழுதுகளை செப்பனிட சாலைகள் அமைக்கும் பொழுது சுற்றுச்சூழல் நலன் கருதி பயன்படுத்தப்படும் திரவத் தாரின் அளவுகளில் 10 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது என கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மேலும் அவர் தெரிவிக்கையில், "கோவை மாநகராட்சியிலுள்ள ஐந்து மண்டலங்களின் அனைத்து வார்டுகளிலும் புதிய தார்சாலைகள் அமைப்பதும், பழுதுள்ள சாலைகளை சீரமைப்பதும் போன்ற பணிகளில் கோவை மாநகராட்சி சிறப்பாக செயலாற்றி வருகிறது.

மேலும், கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் புதியதாக தார் சாலைகள் அமைக்கப்படும் பொழுது பாதாள சாக்கடைக் குழாய்கள் பதிக்கும் பணிகள், புதியதாக குடிநீர் விநியோகக் குழாய்கள் பதித்தல் மற்றும் பழுது பார்த்தல், புதியதாக ஆழ்குழாய் கிணறு அமைத்து கிணற்று நீர் பகிர்மான குழாய்கள் பதித்தல் மற்றும் பழுது பார்த்தல், தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் பாதாள மின் வடம் அமைத்தல், இணையதள வடங்கள் அமைத்தல் போன்ற பணிகளால் சாலையில் ஏற்படும் பழுதுகளை செப்பனிட சாலைகள் அமைக்கும் பொழுது திரவத் தாரின் அளவுகளில் 10 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், கோவை மாநகராட்சியில் உள்ள தெற்கு மண்டலம், 98-வது வார்டுக்குட்பட்ட பி.டி.ரோடு, எல்.ஐ.சி. காலனியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும், 100-வது வார்டுக்குட்பட்ட கணேசபுரம் மெயின் ரோடு, ஸ்ரீனிவாசா நகர், இரங்கநாதபுரம் மற்றும் கார்மல் நகரில் ரூ.46.50 லட்சம் மதிப்பீட்டிலும், கிழக்கு மண்டலம், 58- வது வார்டுக்குட்பட்ட சக்கையார் நகர் மற்றும் ஜோதி நகரில் ரூ.286.50 லட்சம் மதிப்பீட்டில் திரவத் தாரின் அளவுகளில் 10 சதவிகிதம் பிளாஸ்டிக் பயன்படுத்தி சாலைகள் முடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுபோன்ற பல இடங்களில் பிளாஸ்டிக் மூலம் தார்சாலைகள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்." இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்தார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...