கோவை தனியார் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை உடை அணிந்து கல்லூரி மாணவர்கள் பொங்கல் வைத்து குலவையிட்டு, குத்தாட்டத்துடன் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

கோவை, பீளமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மேலாண்மை கல்லூரி சார்பில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழ் பாரம்பரிய முறைப்படி மேலாண்மை கல்லூரி மாணவர்களும், மாணவிகளும் வேட்டி, சேலை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். 

கல்லூரி வளாகத்தில் அடுப்பு மூட்டி சர்க்கரை பொங்கல் வைத்த மாணவ, மாணவிகள் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வரவேற்றனர். கல்லூரி வளாகத்தில் நடந்த இந்த பொங்கல் விழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் கிராமங்களில் உள்ளதை போன்று கரும்பு ஜூஸ், பஞ்சுமிட்டாய், பதநீர், நொங்கு போன்ற பாரம்பரிய உணவு வகைகள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில், மாணவ, மாணவிகள ஜமாப் வாத்திய இசைக்கு ஏற்ப ஆட்டம், பாட்டத்துடன் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர். அனைத்து தரப்பு மாணவ, மாணவிகளும் ஒன்றாக படிப்பை மட்டுமே மையமாகக் கொண்டு கலாச்சாரத்தினை மறந்து வரும் நிலையில் தமிழக கலாச்சாரம் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தெரிவதற்காக தமிழ் முறைப்படி பொங்கல் கொண்டாடுவதாக அக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் தெரிவித்தனர். 

பொங்கல் விழாவை முன்னிட்டு கோலப்போட்டி, கரும்பு கடிக்கும் போட்டி, மண்பாணையில் ஓவியம் வரையும் போட்டி என பல்வேறு போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்டது.

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் இக்கல்லூரியில் படித்து வருவதால் பொங்கல் பண்டிகைக்காக தொடர் விடுமுறையும் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...