சுகாதார வசதிகளை செய்து தராத மாநகராட்சியை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன்பாக மலம் கழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது


கோவை மாநகராட்சியின் 75-வது வார்ட்டிற்குட்பட்ட உப்பிலியான் திட்டு பகுதி மக்கள் காலைக்கடன்களை கழிக்க பொது சுகாதார மையம் அமைத்து தர வேண்டி பல்வேறு மனுக்களை அளித்து வந்துள்ளனர்.

பொது சுகாதார மையம் கட்ட 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதும் இதுவரை கழிப்பிடம் கட்டப்படாததால் அப்பகுதி மக்கள் அருகாமையில் உள்ள ரயில் தண்டவாளப் பகுதிகளை பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். 

இந்நிலையில் தங்கள் பகுதியில் சுகாதார வசதிகளை செய்து தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆதித்தமிழர் பேரவை தலைமையில் இன்று மாநகராட்சி அலுவலகம் முன்பாக மலம் கழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது பேசிய அவர்கள், உரிய சுகாதார வசதிகள் செய்யப்படாததால் ரயில்வே தண்டவாளங்களை காலை கடன்களை கழிக்க பயன்படுத்த வேண்டிய நிலை இருப்பதாகவும், இதனால் ரயில்வேத்துறையின் அபராத  தண்டனைகளை ஏற்க வேண்டிய நிலை இருப்பதாகவும் வேதனை தெரிவித்தனர். 

மேலும் தங்கள் பகுதிக்காக ஒதுக்கப்பட்ட 10 லட்சம் ரூபாய் என்னவானது என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உடனடியாக பொது சுகாதார கழிப்பிடம் அமைத்துத் தர வேண்டும் எனவும் வலியுறித்தினர். 

இதையடுத்து மலம் கழிக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...