கோவையில் பொங்கல் விற்பனைக்கு வைத்திருந்த வேதிபொருள் கலப்படம் செய்யப்பட்ட வெல்லத்தை உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகள் பறிமுதல்! !


கோவையில் பொங்கல் விற்பனைக்கு வைத்திருந்த வேதிபொருள் கலப்படம் செய்யப்பட்ட  வெல்லத்தை உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகள் பறிமுதல்  செய்து சீல் வைத்தனர், மேலும் தாமஸ்வீதி, ரங்கே கவுண்டர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொங்கல் தினத்தை முன்னிட்டு கரும்பு, வெல்லம், உள்ளிட்ட பொருட்களின் விற்பனை தற்போது சூடு பிடிக்க தொடங்கி உள்ளது, இந்நிலையில் கோவை தாமஸ்வீதியில் உள்ள ஒரு சில வெல்ல மண்டிகளில் பொதுமக்களை கவர்வதற்காக வெல்லத்தின் வண்ணத்தை அதிகரிக்க சோடியம் ஹட்ரோ சல்பைடு பயன்படுத்துவதாக உணவு பாதுக்காப்பு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் இன்று கோவை டவுன்ஹால் தாமஸ் வீதி, ரங்கே கவுண்டர் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வெல்ல மண்டிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர், அதில் தாமஸ் வீதி பகுதியில் உள்ள ஒரு வெல்ல குடோனில் 750 கிலோ சோடியம்  ஹட்ரோ சல்பைடு வேதி பொருள் கலந்த கலப்பட வெல்லத்தை பறிமுதல் செய்து, சீல் வைத்தனர், மேலும் அதன் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர், ஆய்வு முடிவில் உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், கலப்பட வெல்லம் பிடிப்பட்டதை அடுத்து நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள வெல்ல குடோன்களில் சோதனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாதிரியான வேதி பொருட்கள் கலந்த உணவை உட்கொண்டால் நுரையீரம் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் வண்ணங்களை பார்த்து இந்த மாதிரியான கலப்பட உணவு பொருட்களை வாங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...