ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து கோவையில் பத்திரிகையாளர்கள் பேரணி

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை உடனடியாக நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு மீது நீதிமன்றம் விதித்துள்ள தடையினை நீக்க வேண்டும். ஜல்லிக்கட்டினை எதிர்த்து தமிழர்களின் கலாச்சாரத்தினை அழிக்கும் பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

லட்சக்கணக்கான இளைஞர்கள் மேற்கொண்டுள்ள இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுமக்கள் உட்பட தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள், ஐடி ஊழியர்கள், வழக்கறிஞர்கள் என பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக கோவை அனைத்து பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடைபெற்றது. 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணி, கோவை இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வஉசி மைதானம் சென்றடைந்தது.

இப்பேரணியின் போது பத்திரிகையாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை உடனடியாக நீக்கி தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பியபடி பேரணி சென்றனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...