நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்: கோவையில் ரசிகர் மன்றம் சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தியும், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவிகள் செய்து ரசிகர் மன்றத்தினர் உற்சாகம்.


கோவை: தமிழகத்தில் இன்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா அவரது ரசிகர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் அதன் நிர்வாகிகள் கடந்த 3 நாட்களாக ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை கோவையில் பாபா படம் வெளியான தியேட்டர்கள் முன்பு மாவட்ட நிர்வாகி சத்தியமூர்த்தி தலைமையிலான ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (நேற்று) 200 ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் 200 ரசிகர்களை ரஜினியின் பாபா படத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.



ரஜினி பிறந்த நாளான இன்று சலீவன் வீதியில் உள்ள ஆஞ்சநேயர் சாமி ராகவேந்திரா கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்களும் நடைபெற்றது.



இதனைத் தொடர்ந்து கோவில் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து மாலையில் ஆர்.எஸ்.புரம் ரத்தின விநாயகர் கோவிலில் 108 தேங்காய்களை உடைத்து வழிபட்டனர். பின்னர் கோட்டை ஈஸ்வரன் சங்கமேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம் நடத்தினர்.

கோவையில் உள்ள அனைத்து கோவில்களிலும் 73 கிலோ இனிப்புகளை வாங்கி பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கினர்.



ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி ரஜினி ரசிகர் நற்பணி மன்ற மாவட்ட நிர்வாகி சத்தியமூர்த்தி தலைமையில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், நிர்வாகிகள் பாபு, பட்டணம் ரவி, பிரேம்நாத், மணிவண்ணன், வடிவேல், வெள்ளியங்கிரி, செந்தில்குமார், ராஜேஷ்குமார், ஆனந்த கிருஷ்ணசாமி, செல்லதுரை, ரஜினி கண்ணன், சிவகுமார், பிரபு, பாலாஜி, ஆறுச்சாமி, சாணவாஸ், சுதாகர், ஷான் பாஷா, ஆட்டோ பாபு, ஆட்டோ மனோகர், முருகேசன், முத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...