உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை மாற்ற எதிர்ப்பு

உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தைப் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்ய விவசாயிகள் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு.


திருப்பூர்: உடுமலையில் 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தைப் பொள்ளாச்சிக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதால் தொழில்துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் 48 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் உடுமலை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தைப் பொள்ளாச்சிக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதால் தொழில்துறையினர் விவசாயிகள் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது, உடுமலை பகுதியில் நூல் மற்றும் காகித ஆலைகள் எனத் தொழில் வளர்ச்சிக்கும், விவசாயம் மற்றும் நகர வளர்ச்சிக்கும் பெரிதும் துணையாக மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அமைந்தது.

அப்போது திமுகவில் சாதிக் பாட்ஷா, கண்ணப்பன் என்ற இரு அமைச்சர்கள் நடத்திய பெரும் போராட்டத்திற்குப் பின் உடுமலையில் மின் பகிர்மான வட்டம் உருவாக்கப்பட்டு அன்று முதல் தற்போது வரை செயல்பட்டு வருகின்றது.

மின் இணைப்பு வழங்குதல், புதிய திட்டங்களை உருவாக்குதல், மின் கம்பம் தயாரிப்பு, மின் மீட்டர்கள், டிரான்ஸ்பார்ம்கள் பராமரிப்பு, பழுது நீக்குதல் என ஏராளமான பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

உடுமலை மின் பகிர்மான வட்டத்தில் 49 பிரிவு அலுவலகங்கள் இருந்தாலும், உடுமலை, மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, தேவனூர்புதூர் என உடுமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளிலேயே அதிக மின் இணைப்புகள் உள்ளன.

தற்போது பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள பிரிவு அலுவலகங்களைப் பிரித்து ஒரு செயற்பொறியாளர் அலுவலகம் கூடுதலாக உருவாக்கவும், கூடுதலாகப் பிரிவு அலுவலகங்கள் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் உடுமலையில் மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் இருப்பது சரியானதாக இருக்கும்.



ஆனால் தற்போது எந்த விதமான காரணமும் இல்லாமல், சொந்த கட்டிடத்தில் செயல்படும் ஒரு அலுவலகத்தை வாடகை கட்டிடத்திற்கு மாற்றுவது ஏன். உடுமலையிலிருந்து மின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் மாற்றப்பட்டால் மின்துறை சார்ந்த வளர்ச்சி பாதிப்பதோடு மின் இணைப்புகள் வழங்குதல் மற்றும் அதிகாரிகள் மீதான புகார்கள் என அனைத்து பணிகளுக்கும் பொள்ளாச்சிக்குச் செல்ல வேண்டும் நிலை ஏற்படும்.

ஆகையால் உடுமலை மின் பகிர்மான வட்டத்தைப் பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்படுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் விவசாயிகள், பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...