திருப்பூர் உடுமலை அருகே காட்டுப்பன்றியால் விபத்து - ஒருவர் பலி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலையின் குறுக்கே கூட்டமாக ஓடிய காட்டுப்பன்றிகளால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தும்பலபட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் வேலை நிமித்தமாக, தனது நண்பர் அசோக்குமார் உடன் இரவு 10 மணிக்கு கவுண்டனூர்சாலையில் பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக விளைநிலங்களில் இருந்து காட்டுப்பன்றிகள் கூட்டமாக சாலையின் குறுக்கே ஓடின. இதனால், பைக் நிலைதடுமாறியதால், பிரபாகரன் மற்றும் அசோக்குமார் ஆகியோர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.



இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே பிரபாகர் பரிதாபமாக உயிர் இழந்தார். அசோக்குமார் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது குறித்து குமாரலிங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டுப்பன்றியால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் உடுமலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...