திருப்பூர் உடுமலை அருகே காட்டுப்பன்றியால் விபத்து - ஒருவர் பலி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலையின் குறுக்கே கூட்டமாக ஓடிய காட்டுப்பன்றிகளால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தும்பலபட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் வேலை நிமித்தமாக, தனது நண்பர் அசோக்குமார் உடன் இரவு 10 மணிக்கு கவுண்டனூர்சாலையில் பைக்கில் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக விளைநிலங்களில் இருந்து காட்டுப்பன்றிகள் கூட்டமாக சாலையின் குறுக்கே ஓடின. இதனால், பைக் நிலைதடுமாறியதால், பிரபாகரன் மற்றும் அசோக்குமார் ஆகியோர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.



இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே பிரபாகர் பரிதாபமாக உயிர் இழந்தார். அசோக்குமார் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இது குறித்து குமாரலிங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டுப்பன்றியால் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் உடுமலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...