பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் நபர் - திருப்பூர் மாவட்ட எஸ்.பியிடம் புகார்

திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் தினேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் அருகே பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட எஸ்.பியிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் 30 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றன.

அதேபகுதியில் வசிக்கும் கருப்பண்ணசாமி என்கிற தினேஷ் கடந்த சில வருடங்களாக கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள குடும்பங்களின் பலவீனங்களை அறிந்து கொண்டு தொலைபேசியிலும் நேரிலும் மிரட்டி பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், பணம் கொடுக்க மறுப்பவர்களை கஞ்சா விற்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து, கைது செய்ய வைப்பேன் அல்லது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசுவேன் என கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்த கணக்கம்பாளையம் பகுதி மக்கள், பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...