பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் நபர் - திருப்பூர் மாவட்ட எஸ்.பியிடம் புகார்

திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் தினேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் அருகே பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட எஸ்.பியிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் 30 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றன.

அதேபகுதியில் வசிக்கும் கருப்பண்ணசாமி என்கிற தினேஷ் கடந்த சில வருடங்களாக கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள குடும்பங்களின் பலவீனங்களை அறிந்து கொண்டு தொலைபேசியிலும் நேரிலும் மிரட்டி பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், பணம் கொடுக்க மறுப்பவர்களை கஞ்சா விற்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்து, கைது செய்ய வைப்பேன் அல்லது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசுவேன் என கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்த கணக்கம்பாளையம் பகுதி மக்கள், பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து, தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...