உதகை அருகே சிறுமி பலாத்காரம் செய்து கொலை - குற்றவாளியை தேடும் தனிப்படை

உதகை அருகே 14 வயது தோடர் பழங்குடியின மாணவியை வீட்டில் விடுவதாக கூறி காரில் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யபட்ட வழக்கில் குற்றவாளியை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


நீலகிரி: உதகை அருகே சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பகல்கோடு மந்து பகுதியில் வசிப்பவர் குட்டன். இவர் தோடர் பழங்குடியினத்தை சேர்ந்தவர். இவரது 14 வயது மகள் உதகை அருகே HPG பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்தார்.

அவர் நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்கு செல்ல வழக்கம் போல் H.P.F பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது சிறுமியின் வீட்டின் அருகில் உள்ள ரஜ்னேஷ் குட்டன்(25) என்ற தோடர் பழங்குடியின இளைஞர் காரில் வந்துள்ளார்.

மது போதையிலிருந்த அவர், தான் வீட்டிற்கு செல்வதாகக் கூறிய மாணவியை வீட்டில் விட்டுவிடுவதாக கூறியதையடுத்து சிறுமியும் காரில் ஏறிச்சென்றுள்ளார். மாணவி காரில் ஏற்றி கொண்ட ரஜ்னேஷ் குட்டன், பைக்காரா சாலையில் உள்ள அங்கர் போர்ட் என்ற இடத்தில் உள்ள வனப்பகுதிக்குள் அவரை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை நீண்ட நேரம் ஆகியும் சிறுமி வீட்டுக்கு வராததால் சிறுமியின் தாயாரும், குடும்பத்தினரும் மாணவியை தேடி உள்ளனர். அப்போது வனப்பகுதியிலிருந்து காரில் வேகமாக வந்த ரஜ்னேஷ் குட்டனை பழங்குடியின இளைஞர்கள் நிறுத்தி கேட்ட போது முன்னுக்குப் பின் முரனான பதிலை கூறி அங்கிருந்து சென்றுள்ளார்.



சந்தேகமடைந்த அவர்கள் அப்பகுதியில் தேடும் போது சிறுமியின் புத்தகப் பையை முதலில் கண்டனர். பின்பு வனப்பகுதியில் தேடிப் பார்க்கும் போது புதர் பகுதியில் சிறுமி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமி இறந்ததை உறுதி செய்து உடலை பிரேதப் பரிசோதனைக்கு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், வழக்கு பதிவு செய்துள்ள பைக்காரா காவல்துறையினர் ரஜ்னேஷ் குட்டன் மீது வழக்கு பதிவு செய்து அவர் மட்டும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தாரா? அல்லது கூட்டு பாலியல் சம்பவம் நடந்துள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக தலைமறைவாக உள்ள ரஜ்னேஷ் குட்டனை போலீசார் 3 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். அந்த தனிப்படையினர் வனப்பகுதியிலும் அருகில் உள்ள கிராமங்களிலும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...