உடுமலை அருகே திமுக சார்பில் சமுதாய வளைகாப்பு - கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உடுமலை அருகே குடிமங்கலத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினார்.


திருப்பூர்: திமுக சார்பில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருவதாக தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு இன்று குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அனிக்கடவு கிரி தலைமையில் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் பி.சாமிநாதன் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கினார்.



மேலும் அவர் பேசுகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நல்லாட்சியில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறார்.

இங்கு குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் 100 கர்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதே போல தேர்தல் வாக்குறுதியில் அளித்த முக்கியமான வாக்குறுதி மகளிர் உரிமைத் திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் காலை உணவு திட்டம் உட்பட பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக முதல்வர் முனைப்பு காட்டி வருகிறார் என பேசினார். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா.பத்மநாபன், ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா கிரி, குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...