உடுமலை அருகே திமுக சார்பில் சமுதாய வளைகாப்பு - கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உடுமலை அருகே குடிமங்கலத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் பங்கேற்று கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினார்.


திருப்பூர்: திமுக சார்பில் நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சாமிநாதன், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டி வருவதாக தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு இன்று குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அனிக்கடவு கிரி தலைமையில் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் பி.சாமிநாதன் கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசை வழங்கினார்.



மேலும் அவர் பேசுகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நல்லாட்சியில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறார்.

இங்கு குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் 100 கர்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு வெகு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதே போல தேர்தல் வாக்குறுதியில் அளித்த முக்கியமான வாக்குறுதி மகளிர் உரிமைத் திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் காலை உணவு திட்டம் உட்பட பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக முதல்வர் முனைப்பு காட்டி வருகிறார் என பேசினார். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா.பத்மநாபன், ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா கிரி, குடிமங்கலம் வடக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...

நல்லூர்பதி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்; பாரம்பரிய இசை, நடனத்துடன் பழங்குடியின மக்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகே உள்ள நல்லூர்பதி பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவில...