பொள்ளாச்சி-போத்தனூர் வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க இன்று சோதனை

பொள்ளாச்சி - போத்தனூர் வழியாக செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, சோதனை ஓட்டம் இன்று (19ம் தேதி) நடப்பதால், பொதுமக்கள் தண்டவாளத்தின் அருகே செல்ல வேண்டாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.


கோவை: இன்று,காலை, 7:30 மணிக்கு துவங்கி, 10:50 மணி வரை இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், ரயிலானது, 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க உள்ளது.

ரயில்வே தண்டவாளம் உறுதித்தன்மையை அறியவும், ரயிலின் வேகத்தை அதிகரிக்கவும், இன்று திண்டுக்கல்-ஈரோடு ரயில், பொள்ளாச்சி - போத்தனுார் வழியாக சோதனை ஓட்டம் செல்கிறது.

இன்று, காலை, 7:30 மணிக்கு துவங்கி, 10:50 மணி வரை இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், ரயிலானது, 110 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க உள்ளது.

அதனால், ரயில்வே தண்டவாளம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தண்டவாளத்தின் அருகே செல்ல வேண்டாம். மேலும், தண்டவாளத்தின் அருகே கால்நடைகள் மேய்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என, ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அதிவேகத்தில் ரயில் இயக்கி சோதனை நடத்திய பின், ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தென்னக ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், பொள்ளாச்சி - கோவை ரயிலின் வேகம் விரைவில் அதிகரிக்கப்படும்.

அதேபோன்று, பொள்ளாச்சியில் இருந்து, கோவை, திருப்பூர், சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்கவும் வாய்ப்புள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Newsletter

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...