உடுமலை அருகே தமிழக கேரள எல்லை காந்தளூரில் கோடை விழா துவக்கம் - பாரம்பரிய நடனமாடி மலைவாழ் மக்கள் அசத்தல்

கோடை விழாவில் இடம்பெற்ற மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய உணவு தானியங்களின் ஸ்டால் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் காந்தளூர் இன்று உலகளவில் சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. கடந்த வருடம் சிறந்த சுற்றுலா தளத்திற்கான விருதும் பெற்றது. இந்நிலையில் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

இப்போது கோடை விடுமுறை என்பதால் கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிக்கின்றனர்.

இங்கு சந்தனக்காடு, இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சி, கச்சாரம் நீர்வீழ்ச்சி, பிரம்ரம் வியூ பாயிண்ட், குளிர்கால பழம் பச்சை கறி தோட்டங்கள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள நிலையில் தினசரி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கிறது. இதையடுத்து காந்தலூர் ஃபெஸ்ட் கோடை திருவிழா நேற்று முதல் தொடங்கியது இந்தக் கோடை விழா இரண்டாம் வருடம் நடத்தப்படுகிறது.

கோடை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு தானியங்களின் ஸ்டால் உள்பட கோடை விழாவில் அமைக்கப்பட்டுள்ளது.



நேற்று முதல் தொடங்கிய கோடை விழாவை கேரளா வருவாய்த்துறை மந்திரி கே.ராஜன் தொடங்கி வைத்தார்.

தேவிகுளம் எம்எல்ஏ ஏ.ராஜா, காந்தளூர் பஞ்சாயத்து தலைவர் பி.டி. மோகன்தாஸ், கோடை விழா கூட்டமைப்பு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். மேலும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...