கோடை விழாவில் இடம்பெற்ற மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய உணவு தானியங்களின் ஸ்டால் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டம் காந்தளூர் இன்று உலகளவில் சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது. கடந்த வருடம் சிறந்த சுற்றுலா தளத்திற்கான விருதும் பெற்றது. இந்நிலையில் இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.
இப்போது கோடை விடுமுறை என்பதால் கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிக்கின்றனர்.
இங்கு சந்தனக்காடு, இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சி, கச்சாரம் நீர்வீழ்ச்சி, பிரம்ரம் வியூ பாயிண்ட், குளிர்கால பழம் பச்சை கறி தோட்டங்கள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள நிலையில் தினசரி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கிறது. இதையடுத்து காந்தலூர் ஃபெஸ்ட் கோடை திருவிழா நேற்று முதல் தொடங்கியது இந்தக் கோடை விழா இரண்டாம் வருடம் நடத்தப்படுகிறது.
கோடை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு தானியங்களின் ஸ்டால் உள்பட கோடை விழாவில் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் தொடங்கிய கோடை விழாவை கேரளா வருவாய்த்துறை மந்திரி கே.ராஜன் தொடங்கி வைத்தார்.
தேவிகுளம் எம்எல்ஏ ஏ.ராஜா, காந்தளூர் பஞ்சாயத்து தலைவர் பி.டி. மோகன்தாஸ், கோடை விழா கூட்டமைப்பு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். மேலும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.
இப்போது கோடை விடுமுறை என்பதால் கேரளா, தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குவிக்கின்றனர்.
இங்கு சந்தனக்காடு, இரைச்சல் பாறை நீர்வீழ்ச்சி, கச்சாரம் நீர்வீழ்ச்சி, பிரம்ரம் வியூ பாயிண்ட், குளிர்கால பழம் பச்சை கறி தோட்டங்கள் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள நிலையில் தினசரி சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரிக்கிறது. இதையடுத்து காந்தலூர் ஃபெஸ்ட் கோடை திருவிழா நேற்று முதல் தொடங்கியது இந்தக் கோடை விழா இரண்டாம் வருடம் நடத்தப்படுகிறது.
கோடை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவு தானியங்களின் ஸ்டால் உள்பட கோடை விழாவில் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் தொடங்கிய கோடை விழாவை கேரளா வருவாய்த்துறை மந்திரி கே.ராஜன் தொடங்கி வைத்தார்.
தேவிகுளம் எம்எல்ஏ ஏ.ராஜா, காந்தளூர் பஞ்சாயத்து தலைவர் பி.டி. மோகன்தாஸ், கோடை விழா கூட்டமைப்பு உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர். மேலும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தன.