திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி அணையில் நீர் வரத்து பூஜ்ஜியம் ஆன நிலையில், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான மறையூர், காந்தளூர், தூவானம் போன்ற பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழை பெய்த காரணத்தால் அணைக்கு நீர்வரத்து கணிசமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், தற்பொழுது போதிய மழை பொழிவு இல்லாத காரணத்தால் அணைக்கு கடந்த சில தினங்களாகவே நீர்வரத்து குறைந்து வந்த நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி பூஜ்ஜியம் ஆனது. இதனால் அணையின் பெரும்பாலான பகுதிகள் வறண்டு பாறைகள் தெரியும் அளவில் உள்ளது. தற்சமயம் அமராவதி அணையின் மொத்த 90 அடியில், தற்போது 39.40 அடியாக உள்ளது. இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில், தற்பொழுது போதிய மழை பொழிவு இல்லாத காரணத்தால் அணைக்கு கடந்த சில தினங்களாகவே நீர்வரத்து குறைந்து வந்த நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி பூஜ்ஜியம் ஆனது. இதனால் அணையின் பெரும்பாலான பகுதிகள் வறண்டு பாறைகள் தெரியும் அளவில் உள்ளது. தற்சமயம் அமராவதி அணையின் மொத்த 90 அடியில், தற்போது 39.40 அடியாக உள்ளது. இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.