பொள்ளாச்சியில் ஒற்றைக் காட்டு யானை உலா - சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

வால்பாறை சாலை பகுதியில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, அவ்வழியாக வந்த சுற்றுலாப் பயணி வாகனத்தின் எதிரில் நடந்து வந்து, பின்னர் வாகனத்தை எதுவும் செய்யாமல் கடந்து சென்றது.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் பகுதிகளில் காட்டு யானைகள், கரடி, செந்நாய்கள் மற்றும் பறவை இனங்கள் அதிக அளவில் உள்ளன. தற்போது கோடை வெயில் தாக்கம் முடிந்து வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை தொடங்கியுள்ளது.

இதனால் ஆழியார் அணை பகுதிகளில் இருந்த காட்டு யானை கூட்டங்கள் பொள்ளாச்சி வால்பாறை சாலை பகுதிகளில் இரவு நேரங்களில் உலா வருகிறது. இதனால் வனத்துறையினர் இரவில் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் கவனமுடன் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் வால்பாறை சாலை பகுதியில் நேற்று மே.13 வனத்திலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, சுற்றுலாப் பயணி வாகனத்தின் எதிரில் நடந்து வந்து வாகனத்தை எதுவும் செய்யாமல் கடந்து சென்றது. அப்போது வாகனத்தில் இருந்த பயணி இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...