தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூரில் 300 வருடம் பழமையான அரச மரம், பலத்த காற்றுக்குப் பின், சாய்ந்து விழுந்தது.
Coimbatore: தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூரில் வீசிய காற்றின் காரணமாக சுமார் 300 ஆண்டுகள் பழமையான அரச மரம் வேரோடு சாய்ந்து. தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூரில் உள்ள பேருந்து நிலையம் அருகில் சுமார் 300 ஆண்டு பழமையான அரச மரத்தின் அடியே விநாயகர் சிலை வைத்து ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த ஊரில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த அரச மரத்தின் அடியில் இளைப்பாறுவது உண்டு.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று (மே.15) மாலை காற்று வீசியபோது சுமார் 300 ஆண்டுகள் பழமையான அரசமரம் வேரோடு சாய்ந்தது. சாலையில் குறுக்கே விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக அப்போது மரத்தடி திணையில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மின்கம்பம் முறிந்து சேதம் அடைந்தது. மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்சரத்தை துண்டித்தனர். பின்னர் விரைந்து வந்து வருவாய் துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர்.
ஊர் மக்களின் அடையாளமாக இருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதனால் மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.