மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி வாரி கோவிலில் ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீநிவாச பரிணய உற்சவம் இன்று அதிகாலையில் தொடங்கியது. பல பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே தென்திருப்பதி தென் திருமலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி வாரி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீநிவாச பரிணய உற்சவ நிகழ்ச்சிகள் இன்று மே.17 அதிகாலை சுப்ரபாதத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து கோவில் மண்டபத்தில் யாகசாலை சிறப்பு பூஜைக்கு பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து கோவில் மண்டபத்தில் யாகசாலை சிறப்பு பூஜைக்கு பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.