கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் வெள்ளிக்கிழமை (24.5.2024) முதல் மழை குறைய வாய்ப்பு உள்ளது என கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை: கொங்கு மண்டலத்தின் பல பகுதிகள் மற்றும் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள உள்பகுதி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கோவை வெதர் மேன் சந்தோஷ் கிருஷ்ணன் இன்று (மே.21) தெரிவித்துள்ளார்.
அதன்படி கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறிய அவர், இன்னும் சில மணி நேரங்களில் இந்த கனமழை கோவையில் துவங்கும் என கூறியுள்ளார். அதேபோல கேரளாவிலும் கனமழை பரவலாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மழை வரும் வெள்ளிக்கிழமை (24.5.2024) அன்று முதல் குறைய துவங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இன்றும், நாளையும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறிய அவர், இன்னும் சில மணி நேரங்களில் இந்த கனமழை கோவையில் துவங்கும் என கூறியுள்ளார். அதேபோல கேரளாவிலும் கனமழை பரவலாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மழை வரும் வெள்ளிக்கிழமை (24.5.2024) அன்று முதல் குறைய துவங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.