கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம்

சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள், ஒலி பெருக்கி வாயிலாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் இன்று மே.22 நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், ஒவ்வொரு மாதமும், சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்துகள் குறித்தும், அவற்றை தவிர்க்க தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசமும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட்டும் கட்டாயம் அணிய வேண்டும். வாகன ஓட்டுநர்கள் கைபேசி பயன்படுத்தாமல் இருப்பது, சாலை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது போன்றவற்றின் மூலம் விபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள், ஒலி பெருக்கி வாயிலாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

சாலைகளில் தேவையான இடங்களில் வேகத்தடையும், சாலையின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர்களை பாதசாரிகள் கடந்த செல்லாதவாறும் அமைக்க வேண்டும்.தேவையான இடங்களில் சாலையின் இருபுறமும் போதுமான அளவு மின் விளக்குகள் அமைத்தல், ஒளிரும்பட்டைகள், எச்சரிக்கை பலகை, ரவுண்டனா தானியங்கி சிக்னல்கள், உயர் கோபுர மின்விளக்குகள், சாலையின் நடுவில் வெள்ளை நிறக்கோடுகளை இடுதல் பயணிகள் நிழற்குடை அமைத்தல், பழுதடைந்த சாலைகளை விரைவாக சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை சம்மந்தப்பட்ட துறைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை ஆணையர் (போக்குவரத்து) ரோகித்நாதன் ராஜகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...