உடுமலை அருகே நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்கள் உருவாக்கிய இஸ்ரோ ராக்கெட், போர் விமானம் மாதிரிகள் கவனம் ஈர்ப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் சோழமாதேவி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாபெரும் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. மாணவர்கள் உருவாக்கிய இஸ்ரோ ராக்கெட், போர் விமானம் மாதிரிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் சோழமாதேவி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாபெரும் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை பள்ளியின் அறங்காவலர் சுப்பிரமணியம் துவக்கி வைத்தார். பள்ளி தலைவர் முருகேசன், உதவி தலைவர் சாதிக்பாட்ஷா, செயலாளர் சண்முக பிரியா ஆகியோரும் கலந்து கொண்டனர்.



கண்காட்சியில் மாணவர்கள் செய்த செய்முறை மாதிரிகள், கலைப் பொருட்கள், ஓவியங்கள், கைவினைப் பொருட்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆசிரியர்களும் தங்களது கலைப் பொருட்களை காட்சிப்படுத்தினர்.



குறிப்பாக, இஸ்ரோ ராக்கெட்டுகளின் மாதிரி வடிவங்கள், போர் விமானம் மாதிரிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.





மாணவர்கள் உருவாக்கிய ரோபோடிக் அமைப்புகள், இதயம், நுரையீரல், வனவிலங்கு சரணாலயம், நீர்வீழ்ச்சி, சூரிய குடும்பம் ஆகியவற்றின் மாதிரி வடிவமைப்புகளும் பார்வையாளர்களை வியக்க வைத்தன.



பழங்கால நாணயங்கள், மண்பாண்டங்கள், மரச்சாமான்கள், பீங்கான்கள், பித்தளை மற்றும் செம்புப் பொருட்கள், எடைக்கற்கள், நவரத்தின கற்கள், ருத்ராட்ச மாலைகள், பழைய வானொலிகள், தட்டச்சு இயந்திரங்கள், தொலைபேசிகள் ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பகத் சிலம்பம் மற்றும் களரி பயிற்சிப் பள்ளியின் பழங்காலப் போர்க்கருவிகளும் இடம்பெற்றிருந்தன.

பாலைவனம், குளிர் பிரதேசம், வெப்ப மண்டலம் ஆகிய பகுதிகளில் வளரும் தாவரங்கள், மருத்துவ குணமுடைய மூலிகைச் செடிகள், மலர்ச் செடிகள் ஆகியவற்றின் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.



கண்காட்சியைப் பார்வையிட்ட பொதுமக்கள், "பள்ளியில் நடைபெற்ற கண்காட்சி மிகவும் பிரமிப்பாக இருந்தது. சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காட்சிக்கு வைக்கப்படும் இஸ்ரோ ராக்கெட்டுகள், போர் விமானங்கள் மாதிரிகள், பழங்கால போர்க்கருவிகள், பழங்கால பொருட்கள் ஆகியவற்றைக் கண்டு களித்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது," என்று தெரிவித்தனர்.

ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டு களித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...