கோவை புல்லுக்காடு பகுதியில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததாக கடந்த மாதம் கைது செய்யப்பட்ட முத்துபாண்டி (28) என்ற நபர் மீது, காவல் துறையினரின் பரிந்துரையின் பேரில் கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை புல்லுக்காடு பகுதியில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட 28 வயது இளைஞர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி, கோயமுத்தூர் புல்லுக்காடு பகுதியில் உள்ள சிடிசி பணிமனை அருகே கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக சே. முத்துப்பாண்டி (28) என்பவரை பி1 கடைவீதி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவர் மீது போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டம், 1985-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், பி1 கடைவீதி காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் தெற்கு சரக காவல் துணை ஆணையாளர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் உத்தரவின்படி, முத்துப்பாண்டி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி, கோயமுத்தூர் புல்லுக்காடு பகுதியில் உள்ள சிடிசி பணிமனை அருகே கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததாக சே. முத்துப்பாண்டி (28) என்பவரை பி1 கடைவீதி காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். அவர் மீது போதை மருந்துகள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டம், 1985-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், பி1 கடைவீதி காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் தெற்கு சரக காவல் துணை ஆணையாளர் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் உத்தரவின்படி, முத்துப்பாண்டி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.