கோவை வஉசி மைதானத்தில் போராட்டக்காரர்களுக்கு வசதியாக துப்புரவு பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு

தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டினை நடத்தக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் எவ்வித அரசியல் கட்சிகளின் ஈடுபாடுமின்றி தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஒருவாரகாலமாக நடைபெற்று வரும் இப்போராட்டத்திற்கு பொதுமக்கள், தன்னார்வலர்கள், தனியார் நிறுவனத்தினர் என பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீங்க வேண்டும். பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இரவு பகலாக வலியுறுத்தி வருகின்றனர்.



இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கான உணவுகள், தண்ணீர்கள் உள்ளிட்டவை பல அமைப்பினரால் நாள் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், அப்பகுதியில் ஏற்படும் குப்பைகளை அகற்றவும், போராட்டத்தில் பெண்களும் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கான கழிப்பிட வசதிகளை ஏற்படுத்திடும் வகையிலும் கோவை மாநகராட்சியின் சார்பில் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று வஉசி மைதானத்தில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் இணைந்து சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

இந்நிகழ்வின் போது க.விஜயகார்த்திகேயன் உடன் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...